News July 5, 2025

திண்டுக்கல்: வீடு வாங்க ரூ.75 லட்சம் கடனுதவி!

image

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் வீடு வாங்க, கட்ட, நீட்டிக்க, பராமத்துப் பணிகள் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது. ரூ.75,00,000 வரை வழங்கப்படும் இந்தக் கடன் தொகையை 20 ஆண்டுகளுக்குள் செலுத்தி முடிக்கலாம். உங்களின் CIBIL score அடிப்படையில் வட்டி விகீதம் நிர்ணயிக்கப்படும். இதற்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்து கொள்ளலாம். அல்லது 0451-2433153ஐ அழைக்கவும். மேலும், தெரிந்து கொள்ள <<16949453>>கிளிக்.<<>> (SHARE IT)

Similar News

News November 8, 2025

திண்டுக்கல்: சிறுமியை சீரழித்த நபர்.. அதிரடி தீர்ப்பு!

image

திண்டுக்கல்: நத்தம் அருகே தேத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (27). இவர் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்தார். நத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் சந்திரனுக்கு மொத்தம் 30 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News November 8, 2025

திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. சிறுவன் உட்பட 3 பேர் கைது!

image

திண்டுக்கல்: சிறுமலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) விளையாட்டு போட்டி நடத்தினார். அப்போது, சிவா (22), பிரகாஷ் (27) ஆகியோர் கேலி செய்தனர். இவர்களுக்கும் சுரேஷ் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இரவு சுரேஷ் வீட்டில் சிவா, பிரகாஷ், 14 வயது சிறுவன் சென்று பெட்ரோல் குண்டு வீசினர். சுரேஷ் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது கொலை மிரட்டல் விடுத்தனர். தாலுகா போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

News November 8, 2025

வேடசந்தூர் அருகே 24 வயது வாலிபர் விபரீத முடிவு!

image

வேடசந்தூர் அருகே சுள்ளெறும்பு, முருநெல்லிக்கோட்டை பகுதியில் பழையகோட்டையைச் சேர்ந்த சண்முகம் மகன் பூபதிராஜா (வயது 24) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவத்தைத் தொடர்ந்து வேடசந்தூர் காவல் நிலையம் விரைந்து சென்று, அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!