News May 3, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் மழை

image

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இரவு 10 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 8, 2025

திண்டுக்கல்: சிறுமியை சீரழித்த நபர்.. அதிரடி தீர்ப்பு!

image

திண்டுக்கல்: நத்தம் அருகே தேத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (27). இவர் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்தார். நத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் சந்திரனுக்கு மொத்தம் 30 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News November 8, 2025

திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. சிறுவன் உட்பட 3 பேர் கைது!

image

திண்டுக்கல்: சிறுமலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) விளையாட்டு போட்டி நடத்தினார். அப்போது, சிவா (22), பிரகாஷ் (27) ஆகியோர் கேலி செய்தனர். இவர்களுக்கும் சுரேஷ் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இரவு சுரேஷ் வீட்டில் சிவா, பிரகாஷ், 14 வயது சிறுவன் சென்று பெட்ரோல் குண்டு வீசினர். சுரேஷ் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது கொலை மிரட்டல் விடுத்தனர். தாலுகா போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

News November 8, 2025

வேடசந்தூர் அருகே 24 வயது வாலிபர் விபரீத முடிவு!

image

வேடசந்தூர் அருகே சுள்ளெறும்பு, முருநெல்லிக்கோட்டை பகுதியில் பழையகோட்டையைச் சேர்ந்த சண்முகம் மகன் பூபதிராஜா (வயது 24) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவத்தைத் தொடர்ந்து வேடசந்தூர் காவல் நிலையம் விரைந்து சென்று, அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!