News October 11, 2025
திண்டுக்கல்: டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி!

திண்டுக்கல்: செந்துறை அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி, ராக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி(45) எனும் விவசாயி நேற்று(அக்.10) மதியம் தனது டிராக்டரை விவசாய பணிக்காக எடுக்க முயன்றார். அப்போது கட்டுப்பாடை இழந்த டிராக்டர் வீட்டின் அருகே இருந்த 50 அடி கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில், கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News November 12, 2025
திண்டுக்கல் இன்றைய முக்கிய செய்திகள்

திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் முகவர் கூட்டம்.
திண்டுக்கல் மாநகராட்சி: “முதல்வர் படைப்பகம்” பூமி பூஜை.
நத்தம்: கைலாசநாதர் கோவிலில் கால பைரவர் பூஜை.
நத்தம்: ரெட்டியபட்டியில் வாக்காளர் பட்டியல் பயிற்சி.
நத்தம்: பால் வேன் ஓட்டுநர் விபத்தில் உயிரிழப்பு.
சிறுமலை: புதிய சாலை பூமி பூஜை, தார் சாலை பணிக்கு அமைச்சர் எம்.எல்.ஏக்கு நன்றி தெரிவிப்பு.
News November 12, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (நவம்பர் 12) இரவு 11:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
திண்டுக்கல்லில் இருவர் மீது குண்டர் சட்டம்!

திண்டுக்கல், நல்லாம்பட்டி சாலையில் மினி பஸ்ஸை வழிமறித்து பணப்பை, செல்போன் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் (31) மற்றும் ராசு (25) இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த இருவர் மீதும் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எஸ்.பி. பிரதீப் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டார். அதையடுத்து, தாலுகா காவல்துறையினர் இருவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


