News October 1, 2025

திண்டுக்கல்: சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு!

image

திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமியை திருமண ஆசை காட்டி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட திண்டுக்கல் மேட்டுப்பட்டி மொட்டணம் பட்டி பகுதியை சேர்ந்த மகேந்திரன்(30) என்பவரை சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 9, 2025

திண்டுக்கல் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

திண்டுக்கல், புதுப்பட்டி அருகே முத்துராம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன் (22). கூலித்தொழிலாளியான இவர், பைக்கில் ஹெல்மெட் அணியாமல், திண்டுக்கல்- பழனி சாலையில் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

News December 9, 2025

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (டிச.8) இரவு 10 மணி முதல் இன்று (டிச.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 9, 2025

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (டிச.8) இரவு 10 மணி முதல் இன்று (டிச.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!