News August 23, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (ஆகஸ்ட் 22) இரவு 11 மணி முதல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறை வெளியிட்ட தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 17, 2026

சின்னாளப்பட்டியில் ரயில் விபத்து – ஒருவர் பலி

image

சின்னாளப்பட்டி முருகன்பட்டி ரயில்வே மேம்பாலத்தில், சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் சரக்கு ரயில் உரசியதில் பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 17, 2026

திண்டுக்கல்: வீட்டில் ஹீட்டர் தீ விபத்து !

image

திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பாப்பாத்தி வீட்டில் விக்னேஷ் தம்பதியர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், இரவு 7 மணியளவில் குளியலறை ஹீட்டரில் அதிக மின்சாரம் காரணமாக தீப்பிடித்தது. அக்கம் பக்கத்தினர் தகவலால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.வாஷிங் மெஷின் உள்ளிட்ட சில வீட்டு உபகரணங்கள் எரிந்து நாசமாகின.

News January 16, 2026

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!