News August 6, 2025
திண்டுக்கல்: அனைத்து சேவைகளுக்கும் ஒரே APP!

திண்டுக்கல் மக்களே.., நீங்கள் விவசாயம் செய்து வருபவராக இருந்தாலோ, இனி செய்ய முனைவோராக இருந்தாலோ இனி கவலை வேண்டாம். உங்களுக்கான மானியங்கள், சேவைகள், உபகரணங்கள், துறை சார்ந்த சந்தேகங்கள், விவசாயக் கூலிகளுக்கான சேவைகள் என அனைத்தையும் எளிய முறையில் வழங்க ‘<
Similar News
News November 12, 2025
திண்டுக்கல்லில் இருவர் மீது குண்டர் சட்டம்!

திண்டுக்கல், நல்லாம்பட்டி சாலையில் மினி பஸ்ஸை வழிமறித்து பணப்பை, செல்போன் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் (31) மற்றும் ராசு (25) இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த இருவர் மீதும் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எஸ்.பி. பிரதீப் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டார். அதையடுத்து, தாலுகா காவல்துறையினர் இருவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
News November 12, 2025
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கான புகார் எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ரெட்டியார்சத்திரம் 0451- 2400195,குஜிலியம்பாறை 04551-293606, நிலக்கோட்டை 04543-294699,வடமதுரை 04551-2911823, ஆத்தூர் 0451-2911823, திண்டுக்கல் 0451-2999603,பழனி 04545-242180, கொடைக்கானல் 04542-243188 என ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, SHARE பண்ணுங்க!
News November 12, 2025
திண்டுக்கல்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!


