News August 7, 2024
திண்டுக்கல்லில் 14 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் விண்ணப்பித்த 14 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வந்துள்ளது. ஸ்கேன் செய்து கணினி மற்றும் வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்து, சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீட்டுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். புதிதாக சேர்ந்த வாக்காளர்களுக்கு சில நாட்களில் அடையாள அட்டை கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 7, 2025
திண்டுக்கல்: நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே (நவம்பர் 6) இன்று நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் முதியவரின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது, அருகில் இருந்த பொதுமக்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஒட்டன்சத்திரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
News November 7, 2025
திண்டுக்கல்லில் தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 30 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதிய ஜூனியர் மற்றும் சீனியர் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இம்முடிவுகளை https://tndtegteonline.in/GTEOnline/GTEResultAUG2025.php என்ற இணையதளத்தில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
திண்டுக்கல் மாவட்டத்தின் இரவு ரோந்து காவலர்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் திண்டுக்கல், ஆத்தூர் ,நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


