News October 8, 2024
திண்டிவனத்தில் கார் மோதி விபத்து: ஒருவர் பலி

திண்டிவனம், வேம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை. இவர், நேற்று முன்தினம் இரவு திண்டிவனம்-செஞ்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ரோஷணை போலீசார் கார் டிரைவர் ரமேஷை விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 14, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

விழுப்புரம் போலீசாரின் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்
News November 13, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” (13.11.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்
News November 13, 2025
டாஸ்மாக் ஊழியரிடம் வழிபறி: குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

விழுப்புரம்,பனையபுரம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ரூ. 4,37,592 பணத்தை வழிபறி செய்த வழக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (நவ.13) நடைபெற்றது. பண்ருட்டி அருகேயுள்ள மாம்பட்டு பகுதியை சேர்ந்த சசிகுமார், சிலம்பிநாதன்பேட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் ஆகிய இருவருக்கு குற்றவியல் நீதிமன்றம் 3 வருடம் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.


