News September 30, 2025

தர்மபுரி: 108 ஆம்புலன்ஸ் மூலம் 28,021பேர் பயன்

image

தர்மபுரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பிரசவம் மற்றும் பல்வேறு அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சாலை விபத்தில் காயமடைந்தவர்கள் 6,194, பிரசவத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிகள் 8119 மற்றும் ஆம்புலன்சில் சுகப்பிரசவமானவர்கள் 12 என ஒட்டு மொத்தமாக கடந்த 08 மாதத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 28,021 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக மேலாளர் ரஞ்சித் நேற்று தெரிவித்தார்.

Similar News

News December 10, 2025

பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை

image

தர்மபுரி; அரசு, அரசுஉதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட(மி.பி.வ) / சீர்மரபினர் (சீ.ம) பிரிவைச் சார்ந்த மாணவ/மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

News December 10, 2025

“கபீர் புரஸ்கார்” விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் “கபீர் புரஸ்கார்” விருது பெற விண்ணப்பிக்கலாம், மேலும் விவரங்களுக்கு https//awards/tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – என ஆட்சியர் ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (டிச.10) தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

உரிமை கோரப்படாத நிதி சொத்துக்கள் ஒப்படைப்பு முகாம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு “நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம்” மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிதி துறைகளின் கிளைகளில் 01.10.2025 முதல் 31.12.2025 வரை தொடர்ச்சியாக நடத்தப்படும்.

error: Content is protected !!