News August 22, 2024
தர்மபுரியில் பெண் உள்பட 3 பேர் குண்டாசில் கைது

தருமபுரியில் கடந்த 12ஆம் தேதி சிங்கேரி அருகே சட்டவிரோதமாக கருவில் பாலினம் கண்டறியும் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை சுகாதாரத்துறையினர் பிடித்து சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளான கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் (45), சின்னராஜ் (29), இலக்கியம்பட்டியை சேர்ந்த கற்பகம் (39) ஆகிய மூவரும் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News November 7, 2025
தருமபுரி: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
News November 7, 2025
தருமபுரி: பால் விலை உயரப்போகிறது!

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநிலக்குழு கூட்டம், தருமபுரி முத்து இல்லத்தில் மாநில துணைத்தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பருத்தி கொட்டை, புண்ணாக்கு மற்றும் கலப்பு தீவனம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதால் பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு, 45, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு, 60 ரூபாய் என விலை உயர்த்தி வழங்க வேண்டும். பின் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றினர்.
News November 7, 2025
தருமபுரி: சொந்த ஊரிலே அரசு வேலை!

சமூகநலத்துறையின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) – என்ற திட்டத்திற்கு பல்நோக்கு உதவியாளர்(24×7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவத்தினை dharmapuri.nic.in தளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.17. ஷேர் பண்ணுங்க!


