News October 11, 2025
தருமபுரி: ஆட்சியர் புதிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்ததாவது; 2025 ஆம் ஆண்டுக்கான பனை விதை நடவு திட்டத்தின் கீழ், மாவட்ட நிர்வாகம், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 15 வரை மொத்தமாக 8,35,500 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான முக்கியமான கட்டமாக அமையும்.
Similar News
News December 13, 2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான கால அட்டவணை

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் கால அவகாசத்தை பயன்படுத்தி வாக்காளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து பதிவு செய்து ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம்

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சரவணன் , தோப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்!
News December 13, 2025
தருமபுரி: g-pay பயனாளர்களே இந்த Trick தெரிஞ்சிக்கோங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


