News April 25, 2025
தம்பியை கட்டையால் அடித்து கொன்ற அக்கா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மதுபோதையில் தகராறு செய்த தம்பியை கட்டையால் அடித்து கொன்ற அக்கா கைது செய்யப்பட்டார். மணிகண்டன் என்பவர் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது அக்கா அம்சவேணி கட்டையால் அடித்ததில் படுகாயமடைந்த மணிகண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 16, 2025
பட்டனூர்: SIR பணிகளை ஆட்சியர் ஆய்வு

வானூர் வட்டம் பட்டானூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் உள்ளீடு செய்யும் பணியினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி வாக்குப்பதிவு அலுவலர் வித்தியாதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
News November 16, 2025
பருவ மழை பாதுகாப்பு பணிகளை ஆட்சியர் ஆய்வு

வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையையொட்டி, முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளுக்கான சிறப்பு தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டார வள அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் இருந்தனர்.
News November 16, 2025
விழுப்புரம்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <


