News August 21, 2024
தமிழ்நாடு மின்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு மின் வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது. இந்த போராட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
தோட்டா தரணிக்கு செவாலியே விருது

சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நேற்று (நவ.13) ‘லா மேசான்’ என்ற கஃபே-நூலகத்தை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ திறந்து வைத்தார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே விருது’ வழங்கப்பட்டது. கலைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.
News November 13, 2025
சென்னை: 10th/ 12th/ ITI/ Diploma முடித்தவர்களா நீங்கள்?

Reliance Jio நிறுவனத்தில் Jio Fiber Engineer (JFE) பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு 18- 32 வயதுள்ள 10th/ 12th/ ITI/ Diploma முடித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.16,000-ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ந் தேதிக்குள் <


