News December 10, 2025
தமிழகம் முழுவதும் முடங்கும்.. அறிவிப்பு வெளியானது

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச.12-ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக டிட்டோஜாக் அமைப்பு அறிவித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் அரசு அலுவல் பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
திருப்பூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருப்பூர் மாவட்ட மக்கள் 0421-2482816 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News January 25, 2026
3-வது T20I: பும்ரா IN, ஹர்ஷித் OUT?

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது T20I போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. பேட்டிங்கில் மாற்றம் இருக்காது என கூறப்படும் நிலையில், அணியில் மீண்டும் பும்ரா சேர்க்கப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது. கை விரலில் காயம் ஏற்பட்டு 2-வது போட்டியில் விளையாடாத அக்சர் படேலும் இன்றைய போட்டியில் விளையாடலாம் எனவும் கூறப்படுகிறது. இருவரும் அணிக்கு திரும்பினால், ராணா & குல்தீப் நீக்கப்படலாம்.
News January 25, 2026
மொழிப்போர் தியாகிகளுக்கு EPS வீரவணக்கம்

ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு இன்று வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், சங்கத்தில் வளர்ந்து, சரித்திரங்கள் பல படைத்து, சீரிளமை கொண்டு விளங்கும், நம் உயிருக்கு நேராம், செந்தமிழர் தாயாம் அன்னைத் தமிழை காக்க தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என EPS பதிவிட்டுள்ளார்.


