News August 22, 2024
தமிழகத்தில் 4 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் பணியாற்றக்கூடிய நான்கு உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜுவால் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் நடைபெற்ற செம்பியம் காவல் நிலையத்திற்கு புதிய உதவி ஆணையரை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் சென்னை செம்பியம் காவல் நிலைய உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News November 7, 2025
வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மதியம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலையில், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News November 7, 2025
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் நாளை (நவ.08) பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த வாரத்திற்கான மழை விடுமுறையை ஈடுசெய்ய நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் நாளை பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
News November 7, 2025
சென்னை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <


