News November 25, 2025
தமிழகத்தில் தற்கொலை எண்ணத்தில் 4 ஆயிரம் பேர்

2022 முதல் ‘நட்புடன் உங்களோடு’ என்ற மனநல சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ‘14416’ என்ற ஹெல்ப்லைன் மூலம், நடப்பு ஆண்டில் இதுவரை தற்கொலை எண்ணங்களுக்கு தீர்வு காண 4 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாம். குடும்ப சண்டை, கடன் தொல்லை போன்றவை இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெண்களை விட ஆண்களே அதிகமாக ஆலோசனை பெற்றுள்ளனராம். எதற்கும் தற்கொலை தீர்வல்ல நண்பர்களே..
Similar News
News January 22, 2026
வெந்நீர் குடிப்பதன் நன்மைகள்

குடிநீரை கொதிக்க வைத்து குடிப்பது சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. வெந்நீர் குடிப்பதால் செரிமானம் மேம்படுத்துகிறது, மலச்சிக்கல் சீராகிறது, மற்றும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சளி மற்றும் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. மேலும், தினமும் காலையில் : எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
News January 22, 2026
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது வரி இல்லை: டிரம்ப்

டிரம்ப், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது விதித்த வரிகள் குறித்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். நான் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவை சந்தித்து, கிரீன்லாந்து உட்பட ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான ஒரு எதிர்கால ஒப்பந்தக் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் நல்லது. ஐரோப்பிய நாடுகள் மீது எந்த வரியும் விதிக்கப்படாது என்று கூறினார்.
News January 22, 2026
போராட்டம் தொடரும்.. ஆசியர்கள் திட்டவட்டம்

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி சென்னை டிபிஐ வளாகம் முன்பு 14-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், தங்களது கோரிக்கையை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முரளி, கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


