News July 14, 2024

தனியார் மருத்துவமனையில் ரூ.1.5 கோடி மோசடி

image

தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதுரையை சேர்ந்த ஜோக்லு ராஜ்குமார் என்பவர் மனிதவள மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மருத்துவமனையில் இருந்து பல்வேறு வழிகளில் ரூ.1.5 கோடி கையாடல் செய்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தது. இப்புகாரின் அடிப்படையில் ராஜ்குமாரை குற்றப்பிரிவு போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News July 8, 2025

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் சங்கர் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருவோணம் உள்ளடக்கிய பட்டுக்கோட்டை கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் இன்று 8ம் தேதி நடைபெற உள்ளதாகவும், அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News July 7, 2025

தஞ்சாவூரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 7, 2025

தஞ்சை: பண கஷ்டத்தை நீக்கும் குபேரபுரீஸ்வரர் கோயில்!

image

தஞ்சை மக்களே செல்வம் என்பது முக்கியமான ஓன்று. பணக்கஷ்டத்தை நீக்கி செல்வம் அருளும் தஞ்சபுரீஸ்வரர் கோயில் நம் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. குபேரன் தன் செல்வங்களை இழந்து இங்குள்ள சிவனை வழிபட்டதில் அவருக்கு அனைத்து செல்வங்களும் மீண்டும் கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகிறது. செல்வம் இழந்தவர்கள் இங்கு வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது இப்பகுது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!