News February 22, 2025
தனியார் பள்ளி பஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து.

வந்தவாசியில் தனியார் பள்ளி பஸ் வேகத்தடை ஏறும்போது அவசர கால கதவு திறந்து மின் கம்பத்தில் மோதியது. அதிர்ஷ்டவசமாக, பஸ்சில் இருந்த 9 மாணவர்கள் முன்பக்கம் அமர்ந்து இருந்ததால் உயிர் தப்பினர். இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து தொடர்பான தகவலை பெற்றோர், போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 8, 2025
தி.மலை ஆனி மாத கிரிவல நேரம் அறிவிப்பு

தி.மலை அண்ணாமலையார் கோவில் சார்பில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 10 ஆம் தேதி அதிகாலை 2.33 மணி தொடங்கி 11 ஆம் தேதி அதிகாலை 3.08 மணி வரை கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஆனி மாதத்தில் கிரிவலம் செல்வதால் பல நன்மைகள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உறவினர்களுக்கு பகிர்ந்து ஒன்றாக கிரிவலம் செல்லுங்கள் பக்தர்களே*
News July 8, 2025
களம்பூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் களம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் உதவி ஆய்வாளர் குபேந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நேற்று முன்தினம் வாகன விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 07/07/2025 அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News July 7, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.