News August 4, 2024
தனியார் பள்ளிகளுக்கும் திமுக அரசு துணை நிற்கும்

எழும்பூரில் இன்று மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, முதல்வர் அரசுப்பள்ளி, தனியார் பள்ளி எனப் பிரித்து பார்ப்பது கிடையாது. அரசுப்பள்ளி மட்டும் இல்லாமல் தனியார் பள்ளி முன்னேற்றத்துக்கும் அரசு துணை நிற்கும் என்றார். மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்துகொண்டு படிக்க வேண்டும் என்ற உதயநிதி, விளையாட்டு வகுப்பை கடன் வாங்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
Similar News
News January 14, 2026
சென்னை: தை முதல் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்

சென்னை மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*கபாலீஸ்வரர் கோயில் (மயிலாப்பூர்)
*பார்த்தசாரதி கோயில் (திருவல்லிக்கேணி)
*வடபழனி ஆண்டவர் கோயில்
*காலிகாம்பாள் கோயில் (சென்னைப் பஜார்)
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News January 14, 2026
சென்னையில் திருக்குறள் போட்டி அறிவிப்பு!

சென்னை மாவட்டத்தில் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் திருக்குறள் சார்ந்த ஓவியப் போட்டிகள் மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறவுள்ளன. வரும் 19.01.2026 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சேத்துப்பட்டு கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டிகள் நடைபெறும். மேலும் இதில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News January 14, 2026
சென்னையில் பிரம்மாண்ட வண்ணமீன் திருவிழா!

தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை வில்லிவாக்கம் சிவசக்தி நகரில் “வண்ணமீன் வர்த்தகத் திருவிழா” நடைபெறவுள்ளது. ஜனவரி 15 முதல் 18 வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த விழாவிற்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேசத் தரத்திலான வண்ணமீன் விற்பனை மையங்கள், நீர்வாழ் காட்சியகம் மற்றும் 150-க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெறுகின்றன.


