News April 11, 2024

தனியார் நிதி நிறுவனம் குறித்து புகார் அளிக்கலாம்

image

கோவை சாய்பாபா காலனி பகுதியில் ட்ரீம் மார்க்கர்ஸ் குளோபல் பி லிட் என்ற நிதி நிறுவனம் மக்களிடமிருந்து முதலீட்டை பெற்று இரட்டிப்பாக திருப்பி தருவதாக கூறி, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளது. இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளிக்கலாம் என கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Similar News

News November 19, 2025

இன்ஸ்டாகிராம் மோகத்தால் கோவையில் சோகம்!

image

கோவை சூலூர் பள்ளபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார் (30). கார் ஷோரூம் டிரைவர். இவரது மனைவி சங்கீதா (26). 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக சங்கீதா சினிமா பாடல்கள், வசனம், காமெடிகளை ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இதனை கணவர் தினேஷ் குமார் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சங்கீதா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சூலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 19, 2025

கோவைக்கு அனுமதி மறுத்த மத்திய அரசு!

image

கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. ரூ.10 ஆயிரத்து 740 கோடி செலவில் அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து வலியம்பாளையம் பிரிவு வரையிலும், மெட்ரோ ரெயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் போதிய மக்கள் தொகை இல்லாததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

News November 18, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (18.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!