News September 30, 2025
தஞ்சை: லாரி மோதி முதியவர் துடிதுடித்து பலி

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை மஞ்சப்பேட்டையைச் சேர்ந்த பழனிமாணிக்கம் (70) தஞ்சாவூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் செறுள்ளார். இந்நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே மேல வஸ்தா சாவடி ரவுண்டானா பகுதியில் பின்னால் வந்த லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே பழனிமாணிக்கம் உயிரிழந்தார். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
தஞ்சாவூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு?

தஞ்சையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 10, 2025
தஞ்சாவூரில் நாளை மின்தடை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் துணை மின் நிலையத்தில் நாளை(டிச.11) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அம்மிநிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் தாமரன்கோட்டை மதுக்கூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
தஞ்சாவூர்: போலீஸ் என கூறி ரூ.44 லட்சம் கொள்ளை

மன்னார்குடியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கார்த்திக்கின் என்பவரின் சகோதரர் அர்ஜுன், பணியாளர் பிரதீபன் ஆகியோர் தஞ்சையில் இருந்து ரூ.44 லட்சத்தை பெற்றுக்கொண்டு, ஊர் திரும்பியுள்ளனர். அப்போது, வாண்டையார் இருப்பு பேருந்து நிறுத்தம் அருகே மர்ம நபர் ஒருவர் தன்னை குற்றப்பிரிவு காவலர் என கூறி, அவர்களிடமிருந்த பணம் மற்றும் செல்போன்களை பறித்து தப்பிச் சென்றார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


