News November 19, 2025
தஞ்சை: பைக் மோதி கூலி தொழிலாளி பலி

பேராவூரணி, பொன்காடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் கூலித் தொழிலாளி. இவர் நேற்று ஆவணம் சாலையில் பொன்காடு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சக்திமணிவேல் என்பவர் ஒட்டி வந்த பைக் கண்ணன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார்.
Similar News
News January 14, 2026
தஞ்சையில் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற பிப்.13-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் ஓய்வூதியர்கள், தங்கள் கோரிக்கை மனுக்களை உரிய விவரங்களுடன் இம்மாதம் ஜன.30ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
தஞ்சை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

தஞ்சை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News January 14, 2026
தஞ்சை: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

தஞ்சை மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


