News November 19, 2025

தஞ்சை: பைக் மோதி கூலி தொழிலாளி பலி

image

பேராவூரணி, பொன்காடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் கூலித் தொழிலாளி. இவர் நேற்று ஆவணம் சாலையில் பொன்காடு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சக்திமணிவேல் என்பவர் ஒட்டி வந்த பைக் கண்ணன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார்.

Similar News

News January 23, 2026

தஞ்சை: சிறுமிக்கு பாலியல் தொல்லை – 3 பேர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வரை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், ரமணா (24), தமிழ்ச் செல்வன் (26), லட்சுமணன் (19) ஆகிய மூன்று இளைஞர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

News January 23, 2026

தஞ்சை: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை!

image

தஞ்சை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ.20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ.18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க <>இங்கு க்ளிக் செய்து<<>> ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம். SHARE IT.!

News January 23, 2026

தஞ்சை: ரயில் பயணிகளுக்கு GOOD NEWS!

image

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாம்பரம் – ராமேஸ்வரம் விரைவு ரயில், தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயிலை பேராவூரணி மற்றும் அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து பாம்பன் விரைவு ரயில் பேராவூரணி மற்றும் அதிராம்பட்டினத்திலும்; செங்கோட்டை அதிவிரைவு ரயில் பேராவூரணியிலும் வரும் 26.1.26 முதல் நின்று செல்லும் என மத்திய ரயில்வே துறை கூறியுள்ளது.

error: Content is protected !!