News September 29, 2025

தஞ்சை: கல்லணையில் மூழ்கி இளைஞர் மாயம்

image

திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் ஆனந்த் (25).  இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் கல்லணை சுற்றி பார்க்க நேற்று மாலை வந்துள்ளார். இவர்கள் கல்லணையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.  பின்னர் காவிரி ஆற்றில் குளித்த போது ஆனந்த் தண்ணீரில் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்த தோகூர் போலீஸார் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

Similar News

News December 9, 2025

Gpay மூலம் மோசடி செய்த இளைஞர் கைது

image

கபிஸ்தலத்தில் பெட்டிக்கடை நடத்தும் முகமது பைசல் என்ற முதியவரிடம் Gpay மூலம் பணம் அனுப்பினால் திருப்பி தந்துவிடுவதாக கூறி ரூ.7,300 மோசடி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய கபிஸ்தலம் காவல்துறையினர், இனாம் கிளியூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(26), என்ற இளைஞரை கைது செய்தனர்.

News December 9, 2025

தஞ்சாவூர்: இருசக்கர வாகன விபத்து – 2 சிறுவர்கள் பலி

image

தஞ்சாவூர் மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த திரிஷேக்(17) மற்றும் உதாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்(17) ஆகிய இரண்டு சிறுவர்களும்
இருசக்கர வாகனத்தில், திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து ஊருக்கு திரும்பி வருந்துள்ளனர். அப்போது திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதாகோவில் சாலை ஓரமாக இருந்த சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் பலியாகினர்.

News December 9, 2025

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.9) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

error: Content is protected !!