News August 7, 2025
தஞ்சை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலரை (04362-231024) அணுகவும். SHARE பண்ணுங்க!
Similar News
News November 8, 2025
தஞ்சை: காவிரியில் குதித்து தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை காவிரியில் திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்த பழனிசாமி (45) என்ற ஸ்விட்ச் போர்டு கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கல்லணைக்கு வந்து ஆற்றில் குதித்துள்ளார். இது குறித்து தோகூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 8, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (நவ.07) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
தெரு நாய் கடித்து 50 நாட்டுகோழிகள் உயிரிப்பு

கும்பகோணம் விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் இவரது வீட்டின் தோட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்த்த நிலையில், நேற்று இரவு இவரது வீட்டின் தோட்டத்திற்கு புகுந்த தெரு நாய்கள் அங்கிருந்த நாட்டுக் கோழிகளைக் கடித்து குதறின. இதில் 50க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் இறந்த கோழிகளை கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகர்களிடம் காண்பித்து வேதனை அடைந்தார்


