News November 20, 2024
தஞ்சை அருகே ஆசிரியை கொலை: பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை

தஞ்சை அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (நவ.20) காலை ஆசிரியை ரமணி என்பவர் மாணவர்கள் கண்முன்னே கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இதனையடுத்து அப்பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 12, 2025
தஞ்சாவூரில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டவர் கைது

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த முகமது அலி ஜின்னாவின் பைக் செவ்வாய்க்கிழமை திருட்டுப் போனது. இதேபோல் மானோஜிப்பட்டி ராதிகாவின் பைக் அக்டோபர் 30ம் தேதி அன்று ஈஸ்வரி நகரில் திருடப்பட்டது. இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில், அம்மாகுளத்தைச் சேர்ந்த கிசாந்த் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
News November 12, 2025
JUST IN தஞ்சை: 2 பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த கோவிந்தபுரத்தில் இன்று காலை மயிலாடுதுறை சாலையில் சென்று கொண்டிருந்த இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்தவர்கள் பெரும் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியது. அப்பகுதியில் இதுபோல தொடர் விபத்துகள் நடைபெறுவதால், வேகத்தடை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


