News August 5, 2024

தஞ்சை: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல்

image

தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் நேற்று அரசு பேருந்து செல்லும் போது மர்ம நபர்கள் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் காளிதாஸ் மற்றும் நடத்துனர் தினசீலன் ஆகியோரை கடுமையாக தாக்கிவிட்டு பேருந்தின் கண்ணாடியையும் உடைத்து விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட சாரதி, முருகன், விஜய் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News January 24, 2026

தஞ்சை: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

image

தஞ்சை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <>upihelp.npci.org.in<<>> என்ற இணைய தளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 24, 2026

தஞ்சை மாவட்டத்திற்கு புதிய அங்கிகாரம்

image

ஜன.25 அன்று கொண்டாடப்படும் தேசிய வாக்காளர் தின விழாவில், சிறந்த தேர்தல் மாவட்டங்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் விருதுகள் வழங்குகிறது. அந்த வகையில், தேர்தல்களில் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தியதற்காக 2025-ம் ஆண்டுக்கான சிறந்த மாவட்டத்திற்கான விருதுக்கு தஞ்சாவூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் சார்பில் ஆட்சியர் பிரியங்கா இவ்விருதிணை பெறுவார் என கூறப்பட்டுள்ளது.

News January 24, 2026

தஞ்சை: கஞ்சா வழக்கில் ஒருவர் மீது குண்டர் சட்டம்!

image

திருவலஞ்சுழி பைபாஸ் பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக சரித்திரப் பதிவேடு குற்றவாளியான கும்பகோணம் ஆடலரசன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படி, ஆடலரசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

error: Content is protected !!