News November 10, 2024
தஞ்சையில் பெயர் பதிவு செய்ய கடைசி வாய்ப்பு

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்கள் பிறப்புச் சான்றிதழில் தங்களது பெயரைச் சேர்க்க டிச.31ஆம் தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய இயலாது. ஏற்கனவே பிறப்புச் சான்றிதழ் பெற்று அலுவலகத்தை அணுகி தங்களது பெயரை விண்ணப்பித்து பெயர் பதிவேற்றம் செய்து கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 10, 2025
தஞ்சை: கல்லணையில் குதித்து தற்கொலை

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (45). ஸ்விட்ச் போர்டு கடை நடத்தி வந்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் தஞ்சை மாவட்டம், கல்லணை காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தோகூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 10, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.9) இரவு 10 மணி முதல் இன்று (நவ.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 9, 2025
தஞ்சாவூர்: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <


