News May 31, 2024
தஞ்சையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறை முன்னிட்டு பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சென்று விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் சுற்றுலாத்தலமான தஞ்சையில் உள்ள பெரிய கோவில், சரஸ்வதி மஹால், அரண்மனை ஆகிய இடங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். அரண்மனை, சரஸ்வதி மஹால் தர்பார்மண்டபம் ஆகிய இடங்களை தங்களது குழந்தைகளுடன் பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
Similar News
News July 11, 2025
தஞ்சையில் தயார் நிலையில் 155 தேர்வு மையங்கள் -ஆட்சியர்

தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-4 எழுத்துத் தோ்வு நாளை காலை நடைபெற உள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 43 ஆயிரத்து 517 தோ்வா்கள் பங்கேற்கவுள்ளனா். இதற்காக அனைத்து வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் 155 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்
News July 11, 2025
தஞ்சை : குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

➡️ தஞ்சை மாவட்டத்தில் நாளை 43,517 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!
News July 11, 2025
தஞ்சாவூா்: கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி

தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சிகள் ஜூலை 15, 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. கறவை மாட்டு பண்ணையம் குறித்து ஜூலை 15ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளா்ப்பு குறித்து 22ஆம் தேதியும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவசப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். (ஷேர் பண்ணுங்க)