News August 20, 2024

தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

image

மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு 18,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால், தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் ஆழமான பகுதிகளில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், கால்நடைகளை ஆழமான பகுதிக்கு செல்லாமல் பாதுகாக்கவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீர் நிலைகளில் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என தஞ்சை கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News January 24, 2026

தஞ்சை: ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு

image

தஞ்சை மாவட்டத்தில் நேற்று (ஜன.23) மருத்துவக்கல்லூரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்புடைய காணாமல்போன 111 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய நபர்களிடம் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராாம் தலைமையில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தஞ்சாவூர் நகர உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், காவல் ஆய்வாளர் சந்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.

News January 24, 2026

தஞ்சை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

தஞ்சை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

News January 24, 2026

தஞ்சை: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

image

தஞ்சை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <>upihelp.npci.org.in<<>> என்ற இணைய தளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!