News September 30, 2025
தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் தஞ்சை எம் பி முரசொலி தலைமையில் இன்று நடைபெற்றது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மத்திய மாவட்ட திமுக கழக செயலாளர் சந்திரசேகரன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, சட்டமன்ற உறுப்பினர்கள் கா.அண்ணாதுரை, என்.அசோக்குமார், எம்.எச்.ஜவாஹிருல்லா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 8, 2025
தஞ்சை: மாணவன் கொலை – விசாரணை தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி இன்று பள்ளியில் விசாரணை நடத்த உள்ளார். இந்த வழக்கில் 15 பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் மோதல் குறித்து விசாரணை நடத்த உள்ளார்.
News December 8, 2025
தஞ்சை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News December 8, 2025
தஞ்சை: திருமணத்தில் நகை திருடிய நபர் கைது

திருவாரூரை சார்ந்த பாஸ்கர் தனது சகோதரி மகளின் திருமணத்திற்காக தஞ்சாவூரில் நடைபெறும் திருமணத்திற்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். திருமண மண்டபத்தில் வைத்திருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் அடங்கிய பையை காணவில்லை. இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணையில் கோவில்வெண்ணியைச் சேர்ந்த புருஷோத்தமனை கைது செய்து, நகை, பணத்தை மீட்டனர்.


