News March 26, 2024

தஞ்சாவூர் அருகே செவிலியர் தற்கொலை 

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு மேலையூரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் அபிநயா(24). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் அபிநயாவை வேலையை விட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அபிநயா நேற்று(மார்ச் 25) வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரரித்து வருகின்றனர்.

Similar News

News November 11, 2025

தஞ்சை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<> இங்கே க்ளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9489048910. SHARE NOW

News November 11, 2025

தஞ்சை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

தஞ்சை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News November 11, 2025

தஞ்சை: கிரிக்கெட் வீரராக மாற வாய்ப்பு!

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், எஸ்.எஸ்.ராஜன் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிக்கு தஞ்சை மாவட்ட வீரர்கள் தேர்வு வரும் நவ.16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தஞ்சை பரிசுத்தம் நகரில் அமைந்துள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 1/9/1985-க்கு பிறகு பிறந்தவர்களும், 31/08/2012-க்கு முன்பு பிறந்தவர்கள் பங்கேற்கலாம் என தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!