News August 21, 2024
ட்ரோன்: கோவை கமிஷனர் எச்சரிக்கை

கோவை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் மாநகர காவல்துறையின் மூலம் ட்ரோன் ஆபரேட்டர்கள், உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 60 உரிமையாளர்கள், ஆபரேட்டர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு Digital Sky வலைதளத்தில் முறைப்படி பதிவுசெய்து அனுமதி பெற அறிவுறுத்தப்படுகிறது. Digital Skyல் பதிவுசெய்யாமல் ட்ரோன் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார்.
Similar News
News January 14, 2026
கோவை: வெறிநாய் தொல்லையா..? உடனே CALL!

தெருநாய் கடியால் நாளுக்கு நாள் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதில் உயிரிழப்புகளும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. எனவே, கோவை மாநகராட்சி சார்பில் 98437 89491 ரேபிஸ் ஹாட்லைன் எண் செயல்பாட்டில் உள்ளது. இதில் வெறி நாய் கடி, கடித்த பின்பு செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை உள்ளிட்ட தகவல்களை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 14, 2026
BREAKING: கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று (ஜன.14) மீண்டும் ஒரு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் வந்ததை தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்புப் பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது கடந்த சில மாதங்களில் விடுக்கப்படும் 29-வது மிரட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 14, 2026
கோவை: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்; கூடுதல் விவரங்களுக்கு <


