News March 29, 2024
டீ போட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

கரூர் தான்தோன்றி மலை பகுதியில் இன்று காலை மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் கருப்பையா வாக்காளர்களை கவரும் விதமாக டீக்கடைக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது டீ போட்டுக் கொடுத்தும் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து காந்திகிராமத்தில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Similar News
News January 20, 2026
கரூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
News January 20, 2026
வெள்ளியணை அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே அழகாபூரியனூரில் உள்ள தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற வெள்ளியணை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட தேவசிகவுண்டன் புதூரைச் சேர்ந்த ரவி 51 மற்றும் அழகா பூரியனூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் 65 ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள், ரூபாய் 100 பறிமுதல் செய்தனர்.
News January 20, 2026
அறிவித்தார் கரூர் மாவட்ட ஆட்சியர்!

கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணச்சலுகையைப் பெற, முதன்முறையாக ஆன்லைன் பஸ்பாஸ் (Online Bus Pass) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் வாயிலாகப் பதிவு செய்து இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்காகக் கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் வரும் ஜன.30 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!


