News November 30, 2024

டிஜிட்டல் மோசடி: ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

இணைய குற்றவாளிகள் டிஜிட்டல் திருமண அழைப்பிதழ்களை வாட்ஸ்அப்பில் மக்களுக்கு அனுப்புகின்றனர். இது போன்ற கோப்புகளை பதிவிறக்குவதன் மூலம், உங்கள் மொபைலில் மால்வேர் வைரஸை பரப்பி, சைபர் குற்றவாளிகள் உங்களின் அனைத்து தகவல்களையும் திருடுகின்றனர். தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் அழைப்பிதழ் வந்தால், அதை கிளிக் செய்ய வேண்டாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் சைபர் கிரைம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Similar News

News November 10, 2025

புஞ்சைபுளியம்பட்டி: ஒவ்வொரு நாளும் திக்.. திக்..!

image

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மாராயிபாளையம் கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை விவசாய நிலங்கள் அருகே உள்ள மலைக்குன்றின் மேல் படுத்திருந்ததை கண்ட கிராம மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு அது நவீன ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

News November 10, 2025

சித்தோடு குழந்தை கடத்தல்! திணறும் போலீஸ்

image

சித்தோடு அருகே நெடுஞ்சாலையில் கோணவாய்க்கால் பகுதியில், ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ்-கீர்த்தனா தம்பியின் ஒன்றரை வயது பெண் குழந்தை கடந்த மாதம், 15-ம் தேதி நள்ளிரவு கடத்தப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படை அமைத்தும் இதுவரை விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. குழந்தை கடத்தப்பட்டு, 25 நாட்களாகியும் சிறு தடயம் கூட கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

News November 10, 2025

திண்டல்: முதியவர் தூக்குமாட்டி தற்கொலை

image

ஈரோடு திண்டல் காரப்பாறையை சேர்ந்தவர் ராமசாமி (64). இவர் கார் பட்டறையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் இருந்தபோது தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஈரோடு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து ராமசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். இவர் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையானவர்.

error: Content is protected !!