News August 6, 2024
சோளிங்கர் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

சோளிங்கர் நகராட்சியில் 30க்கும் மேற்பட்ட கடை மற்றும் வீட்டு வரி செலுத்தாதவர்களுக்கும், தொழில் உரிமம் பெறாதவர்களுக்கும் நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன் தலைமையில் நோட்டீஸ் வழங்கி, வரி கட்டாதவர்கள், உரிமம் பெறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று எச்சரிக்கை செய்தார். மேலும் குறித்த நாட்களுக்குள் வரி செலுத்தாவிடில் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.
Similar News
News January 20, 2026
ராணிப்பேட்டை: அழுகிய நிலையில் ஆண் சடலம்!

திமிரி அருகே விலாரி கிராம கூட்ரோடு அருகே முட் புதரில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. தகவல் அறிந்த திமிரி போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு 45 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. முதற்கட்ட விசாரணைக்கு பிறகு அழுகிய நிலையில் கிடந்த உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 20, 2026
ராணிப்பேட்டை: தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவன்!

வாலாஜாவில் சபரிநகர் தேவதானத்தை சேர்ந்த வாலிபர் யோகராஜ் (21). இவர் வாலாஜாவில் தனியார் கல்லூரியில் 1-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று பெற்றோரிடம் செலவுக்கு பணம் கேட்ட போது பெற்றோர் மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த யோகராஜ் வீட்டின் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வாலாஜா போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 20, 2026
ராணிப்பேட்டை: ரத்த வெள்ளத்தில் ஆண் சடலம்!

கிருஷ்ணாவரம் பகுதியில் பலத்த வெட்டுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. பிணமாகக் கிடந்தவருக்கு தலை, கழுத்து, தாடை, கை ஆகிய இடங்களில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தன. தகவலறிந்த சிபிகாட் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாகக் கிடந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.


