News December 10, 2025

சேலம்: துணிக்கடை மேலாளர் விபரீத முடிவு

image

சேலம் பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் அருள் பிரகாஷ் 38 வயதான இவர் சாரதா கல்லூரி அருகே உள்ள துணிக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சடலத்தை கைப்பற்றி என்ன காரணத்திற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News January 25, 2026

சேலம்: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News January 25, 2026

சேலம்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

சேலம் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)

News January 25, 2026

ஆத்தூர்: திமுகவில் இணைந்தார்.. அதிர்ச்சியில் அதிமுக

image

ஆத்தூர் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ மாதேஸ்வரன், இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன், கடந்த 2011 – 2016 காலகட்டத்தில் ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அதிமுக எம்எல்ஏ, திமுகவில் இணைந்தது சேலம் அதிமுகவினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!