News August 6, 2025
சேலம்: காரில் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல்

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக வரும் போதை பொருட்களைத் தடுக்க காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புளியம்பட்டி பகுதியில் ஓமலூர் போலீசார் கன தவாணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நிற்காமல் சென்ற வாகனத்தை காவல்துறையினர் விரட்டிப் பிடித்தனர். காரில் இருந்த 5 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 9, 2025
கன்னங்குறிச்சி அருகே சோகம்: தொழிலாளி பலி

கன்னங்குறிச்சி அடுத்த தாமரை நகரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மாதேஷ் (40), கடந்த 30-ந் தேதி முருகன் கோவில் அருகே கட்டிட வேலை செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி மாதேஷ் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை.
News December 9, 2025
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், இளங்கலை மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறதாகவும், தகுதியுள்ள மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 31-12-2025க்குள் http://umis.tn.gov.in/ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
News December 9, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


