News December 14, 2025

சேலம்:திருமணம் ஆகாத ஏக்கத்தில் சோகமான முடிவு!

image

சேலம்: இந்திரா நகர் மேச்சேரி பிரிவு ரோட்டைச் சேர்ந்த பழ வியாபாரி லட்சுமண பெருமாள் (30), திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று தனது பழக்கடை குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 21, 2026

ஜனவரி 24 கடைசி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் “முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் 2026” போட்டிகள் ஜனவரி 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் ஜனவரி 24 மாலைக்குள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அழைப்பு விடுத்துள்ளார்.

News January 21, 2026

ஜனவரி 24 கடைசி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் “முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் 2026” போட்டிகள் ஜனவரி 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் ஜனவரி 24 மாலைக்குள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அழைப்பு விடுத்துள்ளார்.

News January 20, 2026

வாழப்பாடி முதல் மேட்டூர் வரை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.20) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!