News November 19, 2025
சேலத்தில் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் மனு!

தமிழகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ முகாம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 432 இடங்களில் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் மகளிர் உரிமை தொகை வழங்க கோரி 1 லட்சத்து 46 ஆயிரத்து 986 பெண்கள் மனு வழங்கினர்.பிற கோரிக்கைகளை வலியுறுத்தி 1 லட்சத்து 36 ஆயிரத்து 25 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 92 ஆயிரம் அணுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
ஆட்டையாம்பட்டியில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்!

சேலம் மாவட்டம் நைனாம்பட்டி அருகே வழித்தடப் பிரச்சினை காரணமாக, 7 மாத கர்ப்பிணியான தரண்யா என்பவரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த கணபதி என்பவர் கல்லால் வயிற்றில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தரண்யா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆட்டையாம்பட்டி போலீசார் கோவிந்தராஜ் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.
News January 20, 2026
உளுந்து, பச்சைப்பயறுக்கு அரசு ஆதரவு விலை அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பச்சைப்பயறு மற்றும் உளுந்தை அரசு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்கலாம் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதன்படி பச்சைப்பயறு கிலோ ரூ.87.68-க்கும், உளுந்து ரூ.78-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
News January 20, 2026
உளுந்து, பச்சைப்பயறுக்கு அரசு ஆதரவு விலை அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பச்சைப்பயறு மற்றும் உளுந்தை அரசு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்கலாம் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதன்படி பச்சைப்பயறு கிலோ ரூ.87.68-க்கும், உளுந்து ரூ.78-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


