News March 19, 2024
செய்யாறு அருகே விவசாயி உயிரிழப்பு

செய்யாறு அருகே பழஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பார்த்தசாரதி.
இவர் சில ஆண்டுகளாக உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பல இடங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று உடல் குணமாகாததால் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அனக்காவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 12, 2026
தி.மலை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அர சால் ஆணையிடப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்ப தேதி நாளையுடன் முடிவடைகிறது. எனவே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாளை சிறுபான்மையினர் அலுவலகத்தில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 12, 2026
தி.மலையில் 551 பேர் ஆப்சென்ட்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 498 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 15 ஆயிரத்து 692 மாணவர்கள், 14 ஆயிரத்து 825 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 517 மாணவ, மாணவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இதில் 29 ஆயிரத்து 966 பேர் தேர்வு எழுதினர். மீதமுள்ள 551 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News March 12, 2026
தி.மலை: G-PAYவில் சிலிண்டர் புக் செய்யலாம்!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


