News November 26, 2025
சென்னை: பொதுவெளியில் பெண்களிடம் ஆபாச சைகை

சென்னை வேளச்சேரி பேருந்து நிலையத்தில் நேற்றிரவு பேருந்துக்காக காத்திருந்த பெண்களிடம், பாலியல் ரீதியாக ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்து, உ.பியை சேர்ந்த மகேஷ் குமார் என்பவரை நேற்று கைது செய்தனர். அவர் சென்னை நகரில் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.
Similar News
News January 13, 2026
சென்னையில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணப்பிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <
News January 13, 2026
சென்னை: பொங்கல் பணம் ரூ.3,000 வரலையா?

உங்களுக்கு இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரலையா? பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என தெரிவித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 என்ற எண்ணில் நீங்கள் புகாரளிக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது பற்றி நீங்கள் மெசேஜ் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஷேர்!
News January 13, 2026
சென்னை: வியாபாரி துடிதுடித்து பலி!

தர்மபுரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (57). இவர், சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தில் தங்கி, டிரை சைக்கிளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று சைக்கிளில் காய்கறி ஏற்றிக்கொண்டு திருவான்மியூர் – கொட்டிவாக்கம் நோக்கி செல்லும்போது பின்னால் டைல்ஸ் ஏற்றி வந்த லாரி மோதியதில் கோவிந்தராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கோபால் வீரையா (39) என்பவரை கைது செய்தனர்.


