News March 27, 2024
சென்னை: நேற்று மட்டும் ரூ.1.42 கோடி பறிமுதல்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. அதன்படி சென்னை சென்ட்ரல், ராயபுரம், ஆழ்வார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று(மார்ச் 26) மட்டும், ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1.42 கோடியை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News November 8, 2025
சென்னை: கேஸ் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க

சென்னை மக்களே! உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த SHARE பண்ணுங்க.
News November 8, 2025
சென்னையில் ஆட்சியர் அதிரடி உத்தரவு

தமிழக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்கும் வகையில் பிங்க் ஆட்டோக்களை மானியத்தில் பெண்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், சென்னையில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் இயக்கி வருவதாக மீண்டும் புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து, பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆர்டிஓ மூலம் நடவடிக்கை எடுக்க சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 8, 2025
சென்னை: 6.42 லட்சம் வாக்காளர்களுக்கு SIR படிவம் விநியோகம்

சென்னை மாநகராட்சியின் தகவலின்படி, மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 4.11.2025 முதல் 7.11.2025 வரை மொத்தம் 6,42,789 வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் (SIR) ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய வாக்காளர்கள் சேர்த்தல், மாற்றம், நீக்கம் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


