News November 26, 2025

சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News January 20, 2026

சென்னை: கழிப்பறையில் சடலமாக கிடந்த கதாசிரியர்

image

வடபழனி பஸ் நிலைய கழிப்பறையில், முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வடபழனி போலீசார், உடலை மீட்டு கே.கே நகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், உயிரிழந்தவர் வடபழனி ஆற்காடு சாலையைச் சேர்ந்த கணேஷ் ராஜா(80) என்பதும், சினிமா கதாசிரியர் என்பதும், வடபழனி பேருந்து நிலையத்தில் இறங்கி, கழிப்பறைக்கு சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

News January 20, 2026

சென்னை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

image

சென்னைமக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 20, 2026

டெலிவரி நபர் மீது தாக்குதல் – EPS கண்டனம்

image

சென்னை வேளச்சேரியில் ZEPTO மளிகைப் பொருள் டெலிவரி செய்யும் பார்த்திபன் மீது, இருவர் நடுரோட்டில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி நெஞ்சை பதைக்க வைக்கிறது என எடப்பாடி பழனிசாமி பதிவு செய்துள்ளார். “இன்னும் எத்தனை முறை தமிழக மக்கள் இப்படிப்பட்ட கொடூர காட்சிகளை காண வேண்டும் முதல்வர் அவர்களே” என கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!