News May 16, 2024
சென்னையில் வீடு புகுந்து கொலை

சைதாப்பேட்டை ஸ்ரீராம் பேட் தெருவில் வசித்து வந்தவர் கௌதம் (25). இவர் தனது நேற்று வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலை சம்பவத்தில் தொடர்புடைய தேனாம்பேட்டையை சேர்ந்த ராஜா (எ) ராஜா பாய் (28), பிரதீப் (எ) குள்ளு (26), தி.நகரை சேர்ந்த சுரேஷ் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Similar News
News November 11, 2025
சென்னை எம்டிசிக்கு தேசிய அளவில் விருது

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) தேசிய அளவில் “சிறந்த பொது போக்குவரத்து அமைப்பு” என்ற விருதை பெற்றுள்ளது. மின்சார மினிபஸ்கள் அறிமுகம், பெண்களுக்கு இலவசப் பயண திட்டம், டிஜிட்டல் டிக்கெட் முறை, மற்றும் 660க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சேவை போன்ற அம்சங்கள் இதற்குக் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விருது, சென்னையின் பொதுப் போக்குவரத்து தரத்தை உயர்த்தியுள்ளது.
News November 11, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News November 11, 2025
சென்னை உஷார் நிலை தீவிர கண்காணிப்பு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்ந்து சென்னையில் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று மாலை கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் சென்னை புறநகரில் இன்று இரவு முதல் தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக விமான நிலையம் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்


