News August 6, 2024

சென்னையில் நிதி நிறுவன மேசடி புகாரில் 2 பேர் கைது

image

சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கில் நிறுவ இயக்குநர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புரசைவாக்கத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து ரூ. 45 கோடி முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மோகன், சுப்ரமணியம் ஆகிய இருவரை காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News November 11, 2025

சென்னை எம்டிசிக்கு தேசிய அளவில் விருது

image

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) தேசிய அளவில் “சிறந்த பொது போக்குவரத்து அமைப்பு” என்ற விருதை பெற்றுள்ளது. மின்சார மினிபஸ்கள் அறிமுகம், பெண்களுக்கு இலவசப் பயண திட்டம், டிஜிட்டல் டிக்கெட் முறை, மற்றும் 660க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சேவை போன்ற அம்சங்கள் இதற்குக் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விருது, சென்னையின் பொதுப் போக்குவரத்து தரத்தை உயர்த்தியுள்ளது.

News November 11, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News November 11, 2025

சென்னை உஷார் நிலை தீவிர கண்காணிப்பு!

image

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்ந்து சென்னையில் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று மாலை கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் சென்னை புறநகரில் இன்று இரவு முதல் தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக விமான நிலையம் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

error: Content is protected !!