News August 4, 2024
சென்னையில் தற்போதும் வாழும் மன்னர் குடும்பம்

ராயபேட்டையில் இருக்கும் அமீர் மஹால் 1798 ஆம் ஆண்டு இந்தோ சர்செனிக் முறையில் கட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் அரசு அலுவலகமாக பயன்படுத்தி இந்த மஹாலை 1876 ஆம் ஆண்டு நவாப் குடும்பம் வசிப்பதற்கான இடமாக மாற்றப்பட்டது. அங்கு குடியேறிய ஆற்காடு நவாப் குடும்பம் தற்போது வரை அங்கு தான் வசித்து வருகின்றனர். முகமது அப்துல் அலி நவாப் தற்போதைய ஆற்காடு நவாப்பின் மன்னராக உள்ளார்.
Similar News
News January 14, 2026
சென்னையில் திருக்குறள் போட்டி அறிவிப்பு!

சென்னை மாவட்டத்தில் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் திருக்குறள் சார்ந்த ஓவியப் போட்டிகள் மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறவுள்ளன. வரும் 19.01.2026 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சேத்துப்பட்டு கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டிகள் நடைபெறும். மேலும் இதில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News January 14, 2026
சென்னையில் பிரம்மாண்ட வண்ணமீன் திருவிழா!

தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை வில்லிவாக்கம் சிவசக்தி நகரில் “வண்ணமீன் வர்த்தகத் திருவிழா” நடைபெறவுள்ளது. ஜனவரி 15 முதல் 18 வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த விழாவிற்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேசத் தரத்திலான வண்ணமீன் விற்பனை மையங்கள், நீர்வாழ் காட்சியகம் மற்றும் 150-க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெறுகின்றன.
News January 14, 2026
சென்னை: பொங்கலை குறிவைத்து கலப்படம் இனிப்பு!

சென்னையில் பொங்கலை குறிவைத்து கலப்படம் இனிப்பு விற்பனையில் பிரபல இனிப்பு கடாயில் வனஸ்பதி பயன்பாடு எனப் புகார் எழுந்துள்ளது. நெய்க்கு பதிலாக பாதிக்குப் பாதி வனஸ்பதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும் 500 டன் அளவுக்கு இனிப்புகள் வனஸ்பதி மூலம் தயாரித்து ரூ.5 கோடி அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.


