News September 28, 2025
சென்னையில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்

நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் (ம) ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் ஆகிய அலுவலகங்களுக்கும் இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 2 தூதரகங்களிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக விஜய் வீட்டிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 16, 2025
சென்னை: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.
News November 16, 2025
சென்னை தள்ளுவண்டி கடைகளுக்கு இனி கட்டாயம்

சென்னை உள்பட தமிழ்நாட்டில் தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களில் இலவசமாக உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
News November 16, 2025
தவெக சார்பில் இன்று போராட்டம்

வாக்காளர் சிறப்பு திருத்த குளறுபடிகளை (SIR) கண்டித்து தவெக சார்பாக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நாளை ஆர்பாட்டம் நடைபெற உள்ள, நிலையில் சென்னை சிவானந்தா சாலையில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் மாவட்ட செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.


