News November 14, 2025
சென்னிமலை அருகே சிக்கிய வட மாநிலத்தவர்கள்: அதிரடி கைது

ஈங்கூர் சிப்காட் தொழில் வளாகப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சென்னிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் பர்மன், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 11, 2025
ஈரோடு கடன் தொல்லையால் விபரீத முடிவு!

ஈரோடு கள்ளிப்பட்டி சஞ்சீவ் காந்தி வ வீதியைச் சேர்ந்த சாமிநாதன் 35 கட்டிட தொழிலாளி. இவருக்கு சத்யா என்பவர் உடன் திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். சாமிநாதனுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டின் சமையலறையில் தூக்கு மாட்டி இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 11, 2025
கோபியில் வசமாக சிக்கிய இருவர்!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நிச்சாம் பாளையம் கிராமத்தில், நேற்று (டிச. 10) வி.ஏ.ஓ. சுரேந்திர குமார் நடத்திய சோதனையில், அனுமதியின்றி நான்கு யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்த ஒரு டிப்பர் லாரி பிடிபட்டது. இதனையடுத்து லாரியைத் திங்களூர் போலீசில் ஒப்படைத்தனர். இந்த வழக்கில்மண் கடத்தியதாகச் சக்திவேல் மற்றும் ராஜேஷ்குமார் என்ற இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
News December 11, 2025
ஈரோடு: ரேஷன் கார்டு இருக்கா? கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

ஈரோடு மக்களே புதிய ரேஷன் கார்டு வேண்டுமா? உங்க ரேஷன் கார்டுல பெயர் சேர்த்தல் ,செல்போன் நம்பர் மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமா? கவலை வேண்டாம் வரும் டிச.13ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்துத் தாலுகா அலுவலகங்களிலும் இதற்கான குறைதீர் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் கொள்ள மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் பண்ணுங்க!


