News November 26, 2025
செங்கோட்டையனுக்கு தவெகவில் என்ன பொறுப்பு?

தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைப்புச் செயலாளர் என்பவர், ஒரு அரசியல் கட்சியின் அமைப்புகளை நிர்வகிக்கும் மற்றும் வலுப்படுத்தும் பணிகளை செய்யும் நபராக இருப்பார். இந்த பதவி, கட்சிகளின் பிரிவுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை உறுதிசெய்து, அதன் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும்.
Similar News
News January 16, 2026
பாலமேடு ஜல்லிக்கட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாயும் காளைகளை, தீரமுடன் தழுவி அதிக காளைகளை தழுவும் வீரருக்கு முதல் பரிசாக ஒரு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்பட உள்ளது. களத்தில் நின்று விளையாடி , பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது.
News January 16, 2026
இன்று இந்த விளக்கு ஏற்றுங்க.. செல்வ செழிப்பு பெருகும்!

மாட்டுப் பொங்கலில் பசு மாடு இல்லாதவர்கள், பஞ்ச காவிய விளக்கு ஏற்றும்படி ஆன்மீகவாதிகள் அறிவுறுத்துகின்றனர். பசுவின் நெய், பால், சாணம், தயிர், கோமியம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுவதே பஞ்ச காவிய விளக்கு. இந்த விளக்கை ஏற்றி வழிபாட்டால், செல்வ செழிப்பு பெருகுமாம். அதேபோல, எங்கேனும் பசுக்களை பார்த்தால், ஏதேனும் ஒரு உணவுப் பொருளை வாங்கி கொடுங்கள். இது 30 முக்கோடி தேவர்களின் அருளையும் பெற்றுத் தரும்.
News January 16, 2026
ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க விரைந்தார் உதயநிதி!

மதுரை, பாலமேட்டில் இன்னும் சற்றுநேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க உள்ளது. இதனை DCM உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக காலையிலேயே எழுந்து தயாரான அவர், வாடிவாசலுக்கு விரைந்துள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் போட்டியானது தொடங்க உள்ளது. இன்று 1,000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் வாடிவாசலில் களம் காண காத்திருக்கின்றனர். சிறந்த காளைக்கு டிராக்டர், சிறந்த வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.


